Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் காணமல் போன வர்த்தகர் சடலமாக!! காத்தான்குடியில் பெரும் பரபரப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரிலிருந்து சனிக்கிழமை இரவு மாயமான வர்த்தகரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து மீட்கப்பட்டதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகரான காத்தான்குடி நகர், மீன்பிடி இலாகா வீதி, மனேஜர் ஒழுங்கையைச் சேர்ந்த ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (வயது 35) எனும் பாதணித் தொழிற்சாலைகளின் உரிமையாளரே சனிக்கிழமை இரவு 7.30 மணியிலிருந்து காணாமல் போயிருந்தார்.
இதுபற்றி அவரது மனைவி பாத்திமா நஸ்லியா ஞாயிற்றுக்கிழமை காலை 11.03.2018 காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைவாக அவரைத் தேடும் பணிகளில் பொலிஸ் குழுக்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் சடலம் கல்லடிப் பகுதி வாவியிலிருந்து மீட்கப்பட்டது.
இந்த வர்த்தகர் மாயமாய் மறைந்த சம்பவம் காத்தான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது சடலம் உடற் கூறாய்வு சட்ட வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர் வழமைபோன்று சனிக்கிழமை இரவு தனது மஞ்சந்தொடுவாயிலுள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறி அருகிலிருந்த உணவகத்தில் தேநீர் அருந்தி விட்டு வெளியேறியவரே இரவு 7.30 மணியளவில் காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Followers

ADD2

Recent Comments