Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குளியல் தொட்டிக்குள் மூழ்கி உயிரிழந்த சிறுவன்: விசாரணைகள் தீவிரம்

நடிகை ஸ்ரீதேவி போன்று கனடா சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் குளியல் தொட்டிக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
கடந்த சனிக்கிழமை ரொறன்ரோவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் லேக் லூயிஸ் பகுதியிலுள்ள கோல்டன் எனப்படும் நகரில் உள்ள சுடுநீர் நிரம்பிய குளியல் தொட்டிக்குள் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து பொலிஸார் தெரிவிப்பதாவது, சிறுவனின் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தோன்றவில்லை எனவும் இச்சிறுவன் எவ்வாறு உயிரிழந்தார் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் இச்சிறுவனின் இறுதிக் கிரியைக்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Followers

ADD2

Recent Comments